மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி பாலர் பாடசாலையின் வருடார்ந்த பாலர் விளையாட்டு விழாவானது திரு.த.தருமசீலன் தலைமையில் மட்/ குருக்கள்மடம் பழைய கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை 20.09.2014 பி.ப. 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், பிரதேச செயலாளர், ம.தெ.எ.பற்று, களுவாஞ்சிகுடி அவர்களும் விசேட அதிதியாக திரு.மா.உலககேஸ்பரம், பிரதிக் கல்விப் பணிப்பாளர், பட்டிருப்பு வலயம், அவர்களும் சிறப்பு அதிதிகளாக திரு.ந. புவனசுந்தரம், முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர், திரு.சி.குருபரன், ஆசிரியர் வள நிலைய முகாமையாளர், திருமதி.அ.சீவகரெத்தினம், முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகஸ்தர், வீரகூரிய, இராணுவப் பொறுப்பதிகாரி, குருக்கள்மடம், திரு.கு.தவப்பிரகாசம், ஓய்வு பெற்ற விரிவுரையாளர், கல்விக்கல்லூரி, அவர்களும் கௌரவ அதிதிகளாக திரு.க.தர்மலிங்கம், அதிபர், மட்/ குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம், திரு. த.கோணேஸ்வரன் - தெற்கு, கி.உ, திரு.மு.கங்காதரன் - வடக்கு, கி.உ, திரு.இ.சங்கரப்பிள்ளை, தலைவர், கி.மு.ச. தெற்கு, திரு.க.லோகநாயகம், தலைவர், கி.மு.ச. வடக்கு, மற்றும் கௌரவ குருமார்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.




0 Comments