Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தலைவர் சம்பந்தனை இலங்கையின் கௌரவமான ஒரு தலைவர் என பாராட்டிய நரேந்திரமோடி

தமி­ழகம் மத்­திய அர­சாங்­கத்­துக்கு எதிர்­கா­லத்தில் கொடுக்கும் அழுத்­தமே இலங்கை இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் இந்­தியா தீர்க்­க­மான முடிவை எடுக்க வழி­வ­குக்கும் என்று மட்­டக்­க­ளப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன். செல்­வ­ராசா தெரி­வித்தார். இந்­திய விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் குழுவில் இடம்­பெற்ற பொன். செல்­வ­ராசா தமது இந்­திய சந்­திப்­புக்கள் பற்றி எடுத்துக் கூறும் போதே மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்து இது தொடர்பில் தெரி­வித்­த­தா­வது:–
எமது கூட்­ட­மைப்பின் இந்­தியப் பயணம் கணி­ச­மான வெற்­றியைக் கண்­டுள்­ளது. தமி­ழக அரசு மற்றும் அங்­குள்ள ஏனைய கட்­சிகள், மக்­களின் தொடர்ச்­சி­யான அழுத்­தமே இந்­திய மத்­தி­ய­ரசின் நிலைப்­பாட்டில் இன்னும் பாரிய முன்­னேற்­றத்தைக் கொண்டு வர முடியும். தமி­ழக முத­ல­மைச்சர் செல்வி. ஜெய­ல­லி­தாவை கூட்­ட­மைப்பு சந்­திப்­ப­தற்­கான வேண்­டு­கோளை விடுத்­தி­ருக்­கின்றோம். விரைவில் அதற்­கான அழைப்பு வரு­மென எதிர்­பார்க்­கின்றோம். தமி­ழக அரசு மற்றும் அங்­குள்ள ஏனைய கட்­சிகள், எதிர்க்­கட்சி மற்றும் மக்கள் சார்ந்த இயக்­கங்­களின் தார்­மீ­க­மான ஆத­ரவு வேண்­டப்­படும் ஒரு நிலையே எமக்கு இப்­பொ­ழுது அவ­சி­ய­மா­கி­றது. தமி­ழக அரசு எதிர்­கா­லத்தில் கொடுக்கும் தொடர்ச்­சி­யான அழுத்­தங்­களே மத்­திய அர­சாங்­கத்தின் நிலைப்­பாட்டில் காத்­தி­ர­மான முன்­னேற்­றங்­களைக் கொண்டு வர முடியும்.
இந்­தி­யப்­ பி­ர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்பு சுமார் 60 நிமி­டங்கள் தொடர்ந்து இடம்பெற்­றது. கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் பாரதப் பிர­த­ம­ரிடம் இலங்­கையின் இன்­றைய அர­சியல் போக்குப் பற்­றியும் தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­படும் கொடு­மைகள் பற்­றியும் ஆதா­ர­பூர்­வ­மாக எடுத்து விளக்­கினார். இரா­ணுவப் பிர­சன்னம், குடி­யேற்­றங்கள், சம்பூர் மக்­களின் அவ­லங்கள் உட்­பட அனைத்து விட­யங்­களும் எங்கள் தலை­வரால் இரத்­தினச் சுருக்­க­மாக எடுத்துக் கூறப்­பட்­டது.
பாரதப் பிர­தமர் உன்­னிப்­பாக கேட்­டது மாத்­தி­ர­மன்றி இடைக்­கிடை தனது சந்­தே­கங்­களை வினா­வியும் தெரிந்து கொண்டார். இலங்­கையில் இடம்­பெற்ற, இடம்­பெ­று­கின்ற அத்­தனை விட­யங்­க­ளையும் தான் தெரிந்துவைத்­துள்ளேன் எனவும் எம்­மிடம் கூறினார்.
பாரதப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி எம்­மு­ட­னான உரை­யா­டலின் போது தலைவர் சம்­பந்­தனை இலங்­கையின் கௌர­வ­மான ஒரு தலைவர் என பாராட்­டி­யது எமக்கு மிகுந்த பெரு­மை­யாக இருந்­தது. பாரதப் பிர­த­மரை சந்­திப்­ப­தற்கு முன் நாம் வெளி­யு­றவுத் துறைச் செய­லாளர், வெளி­யு­றவுத் துறை அமைச்சர், இந்­திய தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஆகி­யோ­ரையும் சந்­தித்து இலங்­கையின் இனப்­பி­ரச்­சினைக்­கான தீர்வின் முக்­கி­யத்­து­வத்­தையும் இன்­றைய இலங்கை அர­சியல் சார்ந்த கெடு­பி­டிகள் பற்­றியும் தமிழ் மக்கள் அனு­ப­விக்கும் பல்­வேறு இன்­னல்கள், சவால்கள் பற்­றியும் எடுத்துக் கூறி­யி­ருந்தோம்.
எல்­லா­வற்­றையும் கேட்டுத் தெரிந்து கொண்ட வெளி­யு­றவு செய­லாளர், அமை ச்சர், இந்­திய தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் அனை­வரும் எம்­மிடம் சகல விட­யங்­க­ளையும் நீங்கள் பிர­த­ம­ரிடம் எடுத்துக் கூறுங்கள். அவரே தீர்­மானம் எடுக்க வேண்­டி­யவர் என ஆலோ­சனை கூறி­னார்கள்.
வெளி­யு­ற­வு­துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எம்­மிடம் ஒரு கருத்தை வலி­யு­றுத்திக் கூறினார். நான் இலங்கை ஜனா­தி­ப­தி­யிடம் ஏற்­க­னவே 13 ஆவது திருத்­தத்தின் முழுமையான அமுலாக்கத்தைப் பற்றிக் கூறியிருக்கிறேன். இந்திய மத்திய அரசைப் பொறுத்த வரை 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்க வேண்டு மென்ற நிலைப்பாட்டிலிருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை. அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள் வோமென அவர் தெரிவித்தார் என செல் வராசா எம்.பி. மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments