பாடசாலைகளில் நல்ல நாடகங்கள், அரங்க நிகழ்த்துகைகளைக் காட்சிப்படுத்தி மாணவர்கள் மத்தியில் நாடக ரசணை மற்றும் நாடகப் பண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேராசிரியர் சி.மௌனகுருவினால் இராவணேசன் நாடகத்தின் இறுவட்டு வடிவம் திரையிடப்பட்டது.
பாடசாலைக் கல்வித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பேராசிரியர் மொனகுருவின் இராவணேசன் நாடகம் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசியப்பாடசாலையில் திரையிடப்பட்டது.
உயர்தரப் பிரிவில் நாடகமும் அரங்கியலும் கற்கும் மாணவிகளுக்காக இந்த நாடகம் திரையிடப்பட்டு கருத்துப் பரிமாறலும் கருத்துப் பகிர்வும் நடைபெற்றது.
இதில், 2010ஆம் ஆண்டு லயனல் வென்ற் அரங்கில் அரங்கேற்றப்பட்ட இராவணேசன் நாடகம் பேராசிரியர் மௌனகுருவினால் விளக்கவுரையுடன் காட்சிப்படுத்தப்பட்டது.
இதில், முன்னாள் வடகிழக்கு மாகாண கலாசார உதவிப் பணிப்பாளர் எஸ்.எதிர்மன்னசிங்கம், மட்டக்களப்பு மேற்கு கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா, பாடசாலை அதிபர் திருமதி ஆர்.கனகசிங்கம், பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அதேநேரம், இராவணேசன் நாடகத்தில் இந்திரஜித்தாக நடித்த தற்போதைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.தவராஜாவும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.
இதே போன்று பாடசாலைகள் தோறும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் நல்ல நாடகங்கள், அரங்க நிகழ்த்துகைகளைக் காட்சிப்படுத்துத்தி மாணவர்கள் மத்தியில் நாடக ரசணை மற்றும் நாடகப் பண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான சிறந்த நாடகங்கள், நிகழ்த்துகைகளை திரையிட்டு, காட்சிப்படுத்தவுள்ளதாக பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.
0 comments: