Home » » பிரமந்தனாறுக்குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவரை இழுத்துச் சென்றது முதலை?

பிரமந்தனாறுக்குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவரை இழுத்துச் சென்றது முதலை?

கிளிநொச்சி, பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை, முதலை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தர்மபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான பழனி பன்னீர்ச்செல்வம் (வயது 42) என்பவர் நேற்று கிளிநொச்சி, பிரமந்தனாறுக்குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உறவினர்கள் தங்களுக்கு தகவல் வழங்கியதை அடுத்து, குளத்தில் அவரை தேடி வருவதாக பொலிஸார் கூறினர். இவரை முதலை இழுத்துச் சென்றிருக்கலாமென்று சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |