Home » » மாயமான மலேசிய விமானத்தில் மனைவி தப்பினார்! சுட்டு வீழ்த்தபட்ட விமானத்தில் கணவரின் சோக கதை….

மாயமான மலேசிய விமானத்தில் மனைவி தப்பினார்! சுட்டு வீழ்த்தபட்ட விமானத்தில் கணவரின் சோக கதை….

விமானத்தில் பணியாற்றிய இன்னொரு மலேசிய இந்தியரான, சஞ்சித் சிங் சந்துவின் கதை மிகவும் சோகமானது. இவர் 1973 ஆண்டு இந்தியாவில் பிறந்தவர். இவரது மனைவியும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணியாற்றுபவர்தான். சந்துவின் மனைவி கடந்த மார்ச் மாதம் மாயமாகிப் போன மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானத்தில் பணியாற்றியவர். அந்த விமானத்தில் கடைசி நேரத்தில் அவர் தனது பணி நேரத்தை மாற்றியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் தற்போது அவரது கணவரான சந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மனைவியைப் போலவே சந்துவும் கூட எம்எச் 17 விமானத்தில் பயணிக்கும் திட்டத்தில் முதலில் இல்லை. ஆனால் தனது மகனை கோலாலம்பூரில் சந்திக்க வேண்டும் என்பதற்காக இன்னொருவரை மாற்றி விட்டு இவர் பயணித்துள்ளார்.
இது குறித்து சஞ்சித் சிங் தந்தை ஜிஜார் சிங் கூறும் போது :-
எனக்கு 71 வயதாகிறது. எனது மனைவிக்கு 73 வயது. என்னை விட 2 வயது மூத்தவர். இருவரும் வயோதிகத்தின் பிடியில் இருப்பவர்கள். சந்து எங்களுக்கு ஒரே மகன். இப்போது அவன் போய் விட்டான். எனக்கு 2 முறை பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. இதயமே நொறுங்கி்ப் போனது போல உணர்கிறேன். இனி நாங்கள் என்ன செய்யப் போகிறோம். நினைத்தாலே பதறிப் போகிறது.தனது மகனின் வருகையை எனது மனைவிதான் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தார். மகனுக்குப் பிடித்த அனைத்து உணவுகளையும் செய்து வந்தார். ஆனால் அவன்தான் வராமலேயே போய் விட்டான் என்று கூறி கதறி அழுதார்.
நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஆம்ஸ்மாடாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777-200 ரக பயணிகள் விமானம் நேற்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேர் உயிரிழந்தனர்.
இதில் விமானப்பணிப் பெண்ணாக பணியாற்றிய தமிழ்ப்பெண் ஏஞ்செலின் பிரமீளா ராஜேந்திரனும் ஒருவர் ஆவார்.30 வயதாகும் ஏஞ்செலின் மலேசியாவின் கிளாங் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இளம் வயது முதலே விமான பயணங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.அதேபோல நீர் விளையாட்டு உள்ளிட்ட சாகசங்களிலும் அதிக ஆர்வம் கொண்டவர்பிரமீளா. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும் இந்தியா மீதும் அதிக பாசத்துடன் இருந்து வந்தவர்.கடந்த மார்ச் மாதம்தான் பிரமீளா, கேரளாவுக்கு சுற்றுப்பயணமாக வந்து போயுள்ளார். அந்தப் பயணத்தின்போது கேரளாவின் எழிலை ரசித்து அதன் புகைப்படங்களையும் தனது பேஸ்புக்கில் போட்டுள்ளார் பிரமீளா.

Malaseja-Ameraits Malaseja-Ameraits-01 Malaseja-Ameraits-02 Malaseja-Ameraits-03 Malaseja-Ameraits-04
- See more at: http://www.canadamirror.com/canada/29079.html#sthash.U612OsV7.m3FTnStt.dpuf
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |