Home » » யாழை அதிரவைக்கும் 4 கோடி திருட்டில் 22 வயது பெண் கைது

யாழை அதிரவைக்கும் 4 கோடி திருட்டில் 22 வயது பெண் கைது

யாழ் பிரதேச செயலர் திருமதி சுகுணரதியின் உதவியாளர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டு, கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முற் பணமாக சில தொகை செலுத்த வேண்டும் என தெரிவித்து 4 கோடி ரூபாயினை பெற்றுகொண்ட சுதர்சினி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணையில் தற்போது இவரது வங்கி கணக்கில் 89 இலச்சம் ரூபா வைப்பில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது, மேலும் சுதர்சினிக்கு உதவியதாக நீர்ப்பாசண திணைக்களக உத்தியோகத்தரின் மனைவி ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார், இப் பெண்ணே தொலைபேசியில் தான் பிரதேச செயலர் சுகுணரதி என்றும் சுதர்சினி உடைய வங்கி கணக்கிற்கு பணத்தினை வைப்பிலிட்டால் தான் கடன்  உதவியினை செய்வதாகவும் கூறியுள்ளார்.
22 வயதான சுதர்சினிக்கு 4 மாத குழந்தை ஒன்றும் உள்ளதனால் தற்போது சிறையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டி விட்டு குழந்தையினை உறவினர்கள் கூட்டி சென்றுள்ளனர். இப் பெண்ணின் பின்னனியில் மேலும் பலர் சிக்ககூடும் எனவும், சுதர்சினி தினமும் பிரதேச செயலக வளாகத்திற்குள்ளேயே பல நாட்கள் சுற்றி திரிந்து தன்னை அலுவலகர் என நம்ப வைத்துள்ளார்.
இதே வேளை சந்திக்கும் போது தேநீரும் கொடுத்ததாக பணத்தை பறிகொடுத்தவர்கள் புலம்புகின்றனர். தற்போது பெண்ணிடம் பணம் கொடுத்த நபர் ஒருவர் தனக்கு 22 இலட்சம் பணம் கொடுத்தால் விடுதலைக்கு உதவுவதாகவும் தகவல்கள்


Jaffna-Lade
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |