ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான தங்கத்தை உருண்டைகளாக்கி அவற்றை விழுங்கிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பெங்களூருக்கு பயணிக்க முயன்ற மருதானையைச்சேர்ந்த பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து மீட்கப்பட்ட சுமார் 72 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க உருண்டைகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த பெண்ணுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளதாக சுங்கப்பிரிவினர் தெரிவித்தனர்
0 comments: