மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் 68.3 வீதமானோர் தொழில் வாய்ப்பின்றி உள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தெரிவித்தார்.இவ் எண்ணிக்கை 28 ஆயிரத்து 162 எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
684 பேர் மாத்திரமே அரச தொழிலில் ஈடுபட்டுள்ளனர் எனத்தெரிவித்த பிரதேச செயலாளர் 49 பேர் அரசசார்பற்ற நிறுவனத்திலும் 2063 பேர் விவசாயத்திலும் ,280 பேர் கால்நடை வளர்ப்பிலும்,235 பேர் மீன்பிடியிலும் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.
4937 பேர் நாள் கூலி வேலையிலும், ஈடுபட்டு வருகின்றனர், எனத்தெரிவித்த பிரதேச செயலாளர் 2523 பேர் வெளிநாட்டில் தொழில் புரிவதாகவும் தெரிவித்தார்.
தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு தொழிற்சாலைகளை அமைக்கமுடியும் எனத்தெரிவித்த பிரதேச செயலாளர்,ஆடைத்தொழிற்சாலை அதிகளவு பொருத்தமானது எனவும் கருத்து தெரிவித்தார்.
0 comments: