Home » » அம்பாறை மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற இடமளிக்க முடியாது

அம்பாறை மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெற இடமளிக்க முடியாது

அம்­பாறை மாவட்­டத்தில் எவ்­வித அசம்­பா­வி­தங்­களும் இடம்­பெற இட­ம­ளிக்க முடி­யாது. இதற்கு சகல தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டு­மென இரா­ணுவத்தின் 241 ஆவது படை­ய­ணியின் பிராந்­திய கட்­டளைத்­த­ள­பதி கேணல் பிரி­யங்க கமகே தெரிவித்தார்.
அட்­டா­ளைச்­சேனை பிர­தேச பள்­ளி­வா­யல்­களின் தலை­வர்கள், மௌல­வி­மார்கள், மதத்­த­லை­வர்கள் ஆகி­யோர்­க­ளுக்­கி­டையில் அம்­பாறை மாவட்­டத்தில் சமா­தா­னத்தை வலி­யு­றுத்தி பால­முனை இரா­ணுவ முகா மில் செவ்­வாய்க்­கி­ழமை (17) நடை­பெற்ற கலந்­து­றை­யா­டலின் போதே கட்­ட­ளைத்­த­ள­பதி கேணல் பிரி­யங்க கமகே இதனைத் தெரிவித்தார்.
கட்­ட­ளைத்­த­ள­பதி கேணல் பிரி­யங்க கமகே தொடர்ந்து உரை­யாற்­று­கையில்:
அம்­பாறை மாவட்­டத்தில் எந்த சமூ­கத்­திற்கும் எவ்­வி­த­மான பாதிப்­பு­களும் ஏற்­ப­டு­வ­தற்கு நான் இட­ம­ளிக்­க­மாட்டேன். ஒவ்­வொரு சமூ­கத்­தி­ன­ருக்கும் அவ­ர­வர்­க­ளு­டைய கலா­சார விழு­மி­யங்கள் உண்டு. அதை நாம் ஒவ்­வொ­ரு­வரும் கட்­டிக்­காக்க வேண்டும்.
பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­கின்­ற­போது வீதி­களில் இறங்கி ஆர்ப்­பாட்டம் நடத்­து­வதாலோ, டயர்­களை எரிப்­ப­தனாலோ எத­னையும் சாதித்து­விட முடி­யாது. இப்­பி­ராந்­தி­யங்­களில் ஏதும் அசம்­பா­வி­தங்கள் ஏற்­பட்டால் எங்­க­ளுக்கு உடன் அறி­வி­யுங்கள் உங்­களை பாது­காப்­பது எங்­க­ளது கட­மை­யாகும்.
நாட்டின் நிரந்­தர சமா­தா­னத்­திற்கு நாம் எல்­லோரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வோ­மானால் இல­கு­வாக எமது சமா­தான இலக்கை அடையமுடியுமென்றார்.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள பௌத்த ஆலயங்களிற்கும் சிங்களப் பிரதேசங்களிலுள்ள பள்ளிவாயல்களிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |