Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சூறைக்காற்றினால் முறிந்து வீழ்ந்தன உயர் அழுத்த மின்கம்பங்கள்! - இருளில் மூழ்கியது தீவகம்.

காரைநகர் - பொன்னாலை பிரதான மின்மார்க்கத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் சூறைக்காற்றினால் முறிந்து வீழ்ந்ததில் தீவுப் பகுதி இருளில் மூழ்கியது. நேற்று மாலை 5 மணியளவில் வீசிய கடும் காற்றினால் காரைநகர் - பொன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மூன்று முறிந்து வீழ்ந்து மின்சாரக் கம்பிகளும் அறுந்தன. இதனால் காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, புங்டுதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு போன்ற பகுதியில் இருளில் மூழ்கியுள்ளன.
யாழ். -ஊர்காவற்றுறை பிரதான வீதியில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் வீதியால் பயணம் செய்தோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீள வழங்குவதற்கான துரித நடவடிக்யைில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments