Home » » மட்டக்களப்பில் குடும்பஸ்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வவுணதீவு காஞ்சிரங்குடா பனையறுப்பான் கிராமத்தைச் சேர்ந்த பாலிப்போடி குணசீலன் (வயது28) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர் தடிகளாலும்இ தலைக் கவசத்தினாலும் தாக்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்துள்ளதாக மட்டக்களப்புப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
தனது வீட்டுக்கு வந்த போதுஇ மனைவியிடம் விசாரணை செய்து கொண்டிருந்த நபர்கள் தன்னைத் துரத்தி வந்து தாக்கி விட்டுத் தப்பிச் சென்றதாக தாக்குதலுக்குள்ளான நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |