|
இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு 11. 30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் அப்பகுதியில் வசிக்கும் ஆலய குருக்கள் ஒருவரின் மனைவி உயிருடன் புதையுண்டு உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவுகளும் தாழ்ப்பகுதிகள் நீரில் நிரம்பியும் காணப்படுகின்றன. இரத்தினபுரி வேவல்வத்த பகுதியில் நேற்று முன்தினமிரவு 11. 30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் 21 வயதுடைய பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் பெண்ணொருவர் காயமடைந்து கலபட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
|
கலபட கல்கந்துர தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருக்களின் வீட்டின் மீதே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.அதில் தங்கியிருந்த குருக்களின் மனைவியான பி.ஜோதிமலர் (வயது 21) என்ற இளம் பெண்ணே உயிரிழந்ததுடன், அவரது தாயாரான 58 வயதுடைய வயோதிபரே இதில் படுகாயமடைந்துள்ளார். இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்ததினால் இவரால் தப்பிக்க முடியாமல் போனது. தாயார் கூக்குரலிட்ட காரணத்தினால் வெளியார் வந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.
இறந்தவரின் கணவரான கோயில் பிரதம குருக்கள் வெளியிடமொன்றுக்கு சென்றிருந்த காரணத்தினால், தனது மனைவியின் துணைக்காக அவரது தாய் அவருடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
|


0 Comments