Home » » தனுஷுடன் தகறாரா? சிவகார்திகேயன் பதில்

தனுஷுடன் தகறாரா? சிவகார்திகேயன் பதில்

டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய சிவகார்த்திகேயன் ‘3’ என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்தார். சிவகார்த்திகேயனை தன்னுடன் நடிக்க வைக்கும்படி தனுஷ் தான் சிபாரிசு செய்தார் என்று கூறப்பட்டது.
அதன் பிறகு தனுஷ் தயாரித்த ‘எதிர் நீச்சல்’ படத்திலும் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க வைக்கப்பட்டார். இந்த படம் வெற்றிகரமாக ஓடியது. வசூலையும் வாரி குவித்தது. இதையடுத்து மளமளவென பட வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து படங்கள் ஹிட்டானதால் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. தற்போது தனுஷ் படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் மறுப்பதாகவும், இதனால் இருவருக்கும் பனிப்போர் நடப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டன.
இது குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்ட போது மறுத்தார்.
எனக்கும், தனுசுக்கும் எந்த தகராறும் இல்லை. நான் இந்த அளவு உயர்வதற்கு காரணமே தனுஷ் தான். என் வளர்ச்சியில் அவர் சந்தோஷப்படுகிறார். தினமும் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்றார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |