Home » » மட்டக்களப்பு வாகரையில் கட்டுத்துவக்கு வெடித்ததினால் ஒருவர் காயம்

மட்டக்களப்பு வாகரையில் கட்டுத்துவக்கு வெடித்ததினால் ஒருவர் காயம்

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள கட்டுமுறிவு காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததினால் குடும்பஸ்த்தர் ஒருவருக்கு முளங்காலில் காயம் ஏற்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

கட்டுமுறிவு கதிரவெளியைச் சேர்ந்த க.குணசேகரம் வயது (58) என்ற 08 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
கோழிக் கூடு அமைப்பதற்க்காக கம்பு தடிகள் வெட்ட காட்டிற்கு சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |