Home » » நாடுகடத்தப்பட்ட பிரிட்டன் பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை!

நாடுகடத்தப்பட்ட பிரிட்டன் பெண்ணின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை!

புத்தரின் உருவத்தை பச்சை குத்திய பிரிட்டன் பெண் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகள் சிறைச்சாலை ஆணையாளர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் துன்புறுத்தப்பட்டதாக பிரிட்டன் பெண் குற்றம்சாட்டியிருந்தார். சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் பாலியல் லஞ்சம் கோரியதாகவும் 2000 ரூபா பணம் கோரியதாகவும் நயோமி மிசசல் கொலிமொன் என்ற குறித்த சுற்றுலா பயணி தெரிவித்திருந்தார்.
இதேவேளை, துன்புறுத்தல்கள் குறித்து முறைப்பாடு எதுவும் செய்யப்படவில்லை என சிறைச்சாலை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் முறைப்பாடு தொடர்பில் சிறைச்சாலை திணைக்களமும் நீர்கொழும்பு சிறைச்சாலை நிர்வாகமும் தனித்தனியாக விசாரணைகளை நடத்த உள்ளன. புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்திய குறித்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்து நாடு கடத்தியிருந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்ட ஈடாக ஒரு கோடி ரூபா வழங்குமாறு தெரிவித்து குறித்த பெண் சடடத்தரணி ஊடாக மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |