புதிதாக நியமிக்கப்பட்ட வெளிநாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் உள்ளடங்கிய குழுவினர் இன்று(10) காலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
சவூதிஅரேபியா நாட்டுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மேயர் ஹூசைன் மொஹமட்டும் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார்.
அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை மாவட்ட செயலகத்தில் சந்தித்த இவர்கள் மாவட்டத்தின் அபிவிருத்தி மீள்குயேற்றம் புனர்வாழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது



0 Comments