Advertisement

Responsive Advertisement

க.பொ.சா. தரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம் சாதனை –அதிகூடிய ஏ சித்திகளை வின்சன்ட் பாடசாலை பெற்று பெருமை சேர்த்தது


கா.பொ.த.சாதாரண முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்பது பாடங்களில் அதிகளவு மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு கல்வி பணியகம் அறிவித்துள்ளது.


வெளியாகியுள்ள கா.பொ.த.சாதாரண தர முடிவுகளின் படி மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 52 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 79 மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் பி.கோவிந்தராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய கல்லூரியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்று சாதனை படைத்துள்ளதுடன் வின்சன்ட் மகளிர் தேசிய  பாடசாலையில் இருந்து 18 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 21 மாணவர்கள் எட்;டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் புனித மைக்கேல் கல்லூரியில் 14மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 21 மாணவர்கள் எட்டு பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.இதேபோன்று புனித சிசிலியா பெண்கள் பாடசாலையிலும் 14 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 12 மாணவர்கள் 08 பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியில் இரண்டு மாணவர்கள் ஒன்பது ஏ ;சித்திகளைப்பெற்றுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் எட்டு பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் இருந்து தோற்றியவர்களில் இரண்டு மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் 10மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

இதேபோன்று கல்லடி விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் ஏழு மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளனர்.

அத்துடன் ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் ஒரு மாணவன் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதுடன் இரண்டு மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 44 ஒன்பது ஏ சித்திகளும் 59 எட்டு ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 52 ஒன்பது ஏ சித்திகளும் 79 எட்டு ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் கோவிந்தராஜா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments