Home » » தமிழ் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

தமிழ் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

2007ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தேசிய தமிழ் தின போட்டியில் தேசியமட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை (26) மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில்  நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் தலைமையிலும்; நடைபெறவுள்ள விழாவில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா, தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது 2013ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |