Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாணவர்களிடையே கலையை வளர்ப்பதற்காக கிறுக்கல் சித்திரத்தில் உருவம் எடுத்து கவிதை இயற்றல் பயிற்சிப் பட்டறை

                                                                            
மாணவர்களிடையே கலையை வளர்ப்பதற்காக கிறுக்கல் சித்திரத்தில் உருவம் எடுத்து கவிதை இயற்றல் பயிற்சிப் பட்டறை ம.தெ.மே.பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று (11) திகதி பிரதேச கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதில் மாணவர்கள் எவ்வாறு கிறுக்கல் சித்திரத்தில் உருவம் எடுத்து கவிதை வரைதல் என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்களும் வழங்கப்பட்டது. அன்றைய தினம் மட்/அரசடித்தீவு விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவர்களும், மட்/ அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலய மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி  வளர்மதி ராஜ், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் த.மேகலா, மு,ஜெயந்தா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இப் பயிற்சி பட்டறையானது தொடர்ந்தும் 13.03.2014ம் திகதி மவடிமுன்மாரி பாடசாலையில் மாவடிமுன்மாரி, நாற்பதுவட்டை, கொல்லனுலை ஆகிய பாடசாலை மாணவர்களுக்கும், 14.03.2014ம் திகதி கலாசார மண்டபத்தில் முதலைக்குடா, முனைக்காடு, கொக்கட்டிச்சோலை மாணவர்களும் இடம்பெறவுள்ளதாக பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி வளர்மதி ராஜ் தெரிவித்தார்.




Post a Comment

0 Comments