Home » » கிழக்பகுப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்

கிழக்பகுப்பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்

தகாத வார்த்தைப்பிரயோகங்களை பிரயோகித்துகிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாக விடுதியில் பேனாக்கத்தி, மற்றும் மின் அழுத்திஎன்பனவற்றை உபயோகித்து தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்கியதில் 10 தமிழ் மாணவர்கள் காயமுற்று செங்கலடி  ஏறாவூர் ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட நிகழ்வொன்றில் மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை மீண்டும் இவ்வாறு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழக முதலாம் ஆண்டு கலைப்பிரிவின் தமிழ் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த 4 ஆம் ஆண்டு சிங்கள மாணவர்கள் தடாலடியாக இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.


மதுபோதையிலேயே  இந்தத் தாக்குதல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வேளையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரும் அதேவேளை கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |