Home » » வான் ஒன்றும் இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

வான் ஒன்றும் இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் சந்தியில் டெல்பீன் வான் ஒன்றும் இரண்டு கார்களும் நேற்று நள்ளிரவு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
அக்கரைப்பற்றில் இருந்து கோமாரியை நோக்கி சென்ற டெல்பீன் வானும் பொத்துவில் பகுதியில் இருந்து அக்கரைப்பற்று பகுதிக்கு சென்ற இரண்டு கார்களும் நள்ளிரவு 12.45 மணிக்கு திருக்கோவில் பொத்துவில் பிரதானவீதி தங்கவேலாயுதபுர சந்தியில்; நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் வானை செலுத்திவந்த சாரதி படுகாயமடைந்து நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்
இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
                                                 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |