மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள் ஐயனார் ஆலயங்களில் குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் சிறப்புற்று விளங்குகின்றது. அந்த வகையில் சிவஸ்ரீ செ.சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் 12.02.2014 புதன்கிழமை இன்று சங்காபிசேகம் நடைபெற்றது. இன்றைய தினம் 1008 சங்குகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்கிரியை வழிபாட்டில் சிவஸ்ரீ ச.மயுரவதனசர்மா குருக்களும் இணைந்து கொண்டார். வழிபாட்டின் பின்னர் அன்னதானம் இடம்பெற்றது.
0 Comments