சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தைச் (என்யுஎஸ்) சேர்ந்த ஆய்வாளர்கள் புற்றுநோய் இருப்பதை எளிதில் கண்டறியும் வகையில் புதிய பரிசோதனைச் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். புதிய பரிசோதனை முறைப்படி, சாதனம் நோயாளியின் உடலுக்குள் புகுத்தப்படும். திசுக்களைச் சாதனம் தொட்டவுடன் அவற்றில் புற்றுநோய் அணுக்கள் உள்ளனவா என அடையாளம் காணப்படும்.
எனவே, திசுக்களை வெளியே எடுத்து பரிசோதிக்கத் தேவைஇல்லை. இதன் விளைவாகப் புற்றுநோய் அணுக்கள் வெளிப்படுவதற்கு முன்னதாகவே நோயாளிகளை நெருக்கும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப் புதிய சாதனம் வகை செய்கிறது. சாதனம் எப்படி செயல்படுகிறது என்பதைக் கண்டறிய தற்போது 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அதைக் கொண்டு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
0 Comments