Home » » மட்டக்களப்பு வந்தாறுமூலை ம.வி. இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு வந்தாறுமூலை ம.வி. இடம்பெற்ற வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

வருடாந்த இல்லங்களுக்கிடையிலான திறனாய்வு போட்டியானது சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் திரு.தி.ரவி தலைமையில் இன்று (26.02.2014) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் திரு.எஸ்.ஸ்ரீகிருஸ்ணராஜா கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதியாக ஏறாவூர் பற்று-2 கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு அவர்களும் பிரதேச அபிவிருத்திகுழு இணைப்பாளர் திரு.ஆ.தேவராஜா மற்றும் பாடசாலை அதிபர்கள் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கே.சுபாஸ்சந்திரன் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திரு.ரீ.ரமேஸ் தீப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வரவேற்க்கப்பட்டு கொடியேற்றல் நிகழ்வுடன் வலயக்கல்விப் பணிப்பாளரினால் விளையாட்டுகள் ஆரம்பிக்கப்பட்துடன் இல்ல மாணவர்களினால் ஒலிம்பிக் தீபமேற்றப்பட்டு அனைத்து விளையாட்டுக்களும் இடம்பெற்றது. விளையாட்டுகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது. அதிதிகளுக்கான நினைவு பரிசில்களும் பாடசாலை அதிபரினால் வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் பாடசாலையின் அதிபர் மற்றும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றது. நல்லையா ராமகிருஸ்ணா விவேகானந்தா விபுலானந்தா இல்லங்களுக்கிடையில் அதிகூடிய விளையாட்டுகளில் வெற்றிபெற்ற இல்லங்கள் மற்றும் இல்ல அலங்காரத்துத்தில் வெற்றி பெற்ற இல்லங்களுக்குமான வெற்றி கேடயங்களை வலயக்கலிவ் பணிப்பாளரினால் வீரர்களுக்கு வழங்கப்பட்டது. மழைக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதி வருடாந்த விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் பாடசாலையின் ஆசிரியாகள்; மற்றும் மாணவர்களின் சிறந்த உத்துழைப்புடன் சிறப்பான முறையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
               
              
              
              
              
             
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |