மட்டக்களப்பு வாழைச்சேனையில் உள்ள கடதாசி தொழிற்சாலையில் இன்று மாலை திடிரென ஏற்பட்ட தீயினால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது மீள் சுழற்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 40 தொன் கடதாசிகள் உள்ளிட்ட பல பொருட்கள் எரிந்து முற்றாக சாம்பலாகியுள்ளன. தீயை இராணுவத்தினரும் பொலிசாரும் மற்றும் தீயனைக்கும் படையினரின் குறுகிய நேரத்திற்குள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
சம்பள நிலுவை கோரி நிர்வாகத்திற்கு எதிராக ஆலை ஊழியர்களினால் அண்மையில் ஆர்ப்பாட்டம் செய்தமையையிட்டு கடந்த 14.02.2014 ஆம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் 17.02.2014 ஆம் திகதி காலை 6.00 மணி வரைக்கும் ஆலையை தற்காலிகமாக மூடிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் நேரப்பதிவாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள்,ஆளிப்பலகை இயக்குனர்கள்,சாரதிகள்.வேலைக்கு சமுகமளி;த்தல் வேண்டும் அதற்காக அவர்கள் மேலதிக ஊதியம் பெற உரித்துடையவர்கள் என்றும் ஆலை நிர்வாகத்தினால் நேற்று வெள்ளிக்கிமை ஆலை ஊழியர்களுக்கு அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஊழியர்கள் இல்லாத நிலையில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.இது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments