Home » » மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம் பெற்றது

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம் பெற்றது

மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இடம் பெற்றது

இன்று 16.01.2014 இல் தரம் ஒன்றில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இலங்கைத் தீவின் அனைத்து ஆரம்பப் பாடசாலைகளில் நடைபெற்று வருகின்றது. தேசிய, மாகாண, வலய, பாடசாலை மட்டங்களில் இவ் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வகையில் கிழக்கு மாகாண நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தின் மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தில் கிழக்கு மகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிசாம் தலைமையில் நடைபெற்றது. விழாவின் வரவேற்பரையினை கிழக்கு மாகாண ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பூ.உதயகுமார் நிகழ்த்த சிறப்புரையினை பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் நிகழ்த்தினார்.
அத்துடன் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் மாணவர்களுக்கு கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. நன்றியுரையினை பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்விப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் நிகழ்த்தினார் இறுதியில் தமிழ்மொழி வாழ்த்தும் இடம்பெற்று நிகழ்வுகள் இனிது நிறைவுற்றது.

நிகழ்வுகளில் சில























Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |