Home » » மட்டக்களப்பு முனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு முனைக்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு

முனைக்காடு தெற்கு பாலர் பாடசாலையில் 2013.12.30ம் திகதி பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாலர் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறுவர்களுக்கான சிறந்த கல்வியை புகட்டி அத்திவாரமாக இருக்கின்ற ஆசிரியர்களை மாலை அணிவித்து கௌரவித்தலும் பாடசாலையில் சிறந்து விளங்கிய மாணவர்களை கௌரவித்து பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றதுடன். மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் பட்டிப்பளைப் பிரதேச கோட்டக்கல்விப் பணிப்பளார் திரு.ந.தயாசீலன், யுக்டா நிறுவன தலைவர் திரு.அ.கருணாகரன், மட்/முனைக்காடு விவேகானந்த வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை ஆகியோரும் பிள்ளைகளது பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
                                   

                               
                            

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |