Home » » சிறுவன் உயிரை பலியெடுத்த குச்சவெளி வெடிப்பு

சிறுவன் உயிரை பலியெடுத்த குச்சவெளி வெடிப்பு

திருகோணமலை - குச்சவெளி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை மாலை வெடிபொருள் ஒன்று வெடித்ததில் 5 வயது சிறுவன் ஒருவன் பலியானதோடு மேலும் இரண்டு சிறார்கள் காயமடைந்துள்ளனர்.
குச்சவெளியில் செந்நூர் என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு சிறார்களும் உயிரிழந்த சிறுவனின் 10 வயது சகோதரனும் 3 வயது சகோதரியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தமது வீடு அமைந்துள்ள காணிக்குள் இந்தச் சிறார்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு கிடைத்த மர்ம பொருளொன்றில் அவர்கள் ஆணி அடித்து பார்த்துள்ளனர். அதன்போதே அந்தப் பொருள் வெடித்துச் சிதறியுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த சிறார்கள் மூவரும் திருகோணமலை வைத்தியசாலையில் மாலை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒரு சிறுவன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளான். மற்யை இருவரும் தீவிர கண்காணிப்புப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றன.

யானைக்குட்டி ஒன்றும் இதே கிராமத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெடிபொருளை உட்கொள்ள முயன்று காயமடைந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக பொலிஸார் கூறுகின்றனர்.
அதேவேளை குச்சவெளி பிரதேசத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னொரு வெடிபொருள் வெடிப்புச் சம்பவத்தில் யானையொன்றும் காயமடைந்துள்ளது.
வெடிபொருளொன்றை உட்கொள்ள முயன்றபோதே யானை உயிரிழந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்களால் யானை மீட்கப்பட்டு வனஜீவராசிகள் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |