2016 ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறமாட்டாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரிட்சையினால் பரிட்சையில் தோற்றும் மாணவர்கள் அவர்களுடைய பெற்றோர்கள் ஒருவித உளத்தாக்கத்திற்கு உள்ளாவதாக அண்மையில் ஆய்வு செய்யப்பட்டு இருந்தது அறிந்ததே.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கல்வியமைச்சின் கீழ் இடம்பெற்றுவரும் செயற்திட்டமான ஆயிரம் பாடசாலை செயற்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டதும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடத்த வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்தார்.
0 Comments