Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீதியில் காயங்களுடன் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சென்ற பொலிஸார் சத்துருக்கொண்டான் சர்வோதயம் வீதியில் இருந்து இந்த சடலத்தினை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் மட்டக்களப்பு பொலிஸ் பனிச்சையடியை சேர்ந்த கு.நிரோசன்(27வயது)என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இருந்து குறித்த இளைஞன் பயணம் செய்த துவிச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக அனுப்புமாறு உத்தரவிட்டதுடன் மரண விசாரணையையும் நடத்தியாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது விபத்துச்சம்பவமாக இருக்கலாம் என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

0 Comments