Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இனவாதிகளுக்கான சாட்டையடியாக அமைந்திருக்கும் மூன்று மாகாண சபை தேர்தல் முடிவுகள்

இனவாதிகளுக்கான சாட்டையடியாக அமைந்திருக்கும் மூன்று மாகாண சபை தேர்தல் முடிவுகள்



இன­வாதம் பேசி தேர்­தலில் வெற்­றி­பெற முடி­யாது என்­பதை வடமேல் மற்றும் மத்­திய மாகா­ண­சபை தேர்­தல்கள் எடுத்துக் காட்­டி­யுள்­ளன. இன­வா­தத்தைக் கக்கும் ஹெல உறு­மய மற்றும் விமல் வீர­வன்­சவின் கட்சி என்­பன இத்­தேர்­தலில் படு­தோல்­வி­ய­டைந்­துள்­ளன.இதன் மூலம் தாம் இனப்­பா­கு­பாட்டை விரும்­ப­வில்லை என்­பதை சிங்­கள மக்கள் எடுத்துக் கூறி­யுள்­ளனர். இது இன­வா­தத்­துக்­கான சாட்­டை­ய­டி­யாகும் என மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­முன்ற உறுப்­பினர் பொன் செல்­வ­ராசா கூறினார்.
வவு­ண­தீவு பிர­தேச செய­லாளர் பிரி­வி­லுள்ள பன்­சேன பிள்­ளை­யா­ரடி, மண்­ட­பத்­தடி ஆகிய கிரா­மங்­க­ளுக்கு விஜயம் செய்த அவர் அங்கு வாழும் மக்­களின் பிரச்­சி­னை­களைக் கேட்­ட­றிந்தார்.அதன்பின் மண்சேனை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஆல­யத்தலை­வர் ஐ. பாஸ்கர தலைமையில் நடை­பெற்ற கூட்­டத்தில் மேலும் கூறி­ய­தா­வது:-வடக்கு தேர்­தலை நடத்த வேண்டாம் என்று பேரி­ன­வா­திகள் கூக்­குரல் எழுப்­பினர்.ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.தற்­போது வேறு வித­மாகக் கூறு­கின்­றனர்.அபி­வி­ருத்­தியின் மூலம் தமிழ் மக்கள் நிம்­ம­தி­யான வாழ்வு வாழ­மு­டி­யாது. எமது அபி­லா­ஷைகள் நிறை­வே­றக்­கூ­டி­ய­தான நிரந்­தரத் தீர்வின் மூலமே அது சாத்­தி­ய­மாகும்.கடந்த 60 வருட கால­மாக இதனை நாம் கோரி பல வழி­க­ளிலும் போராடி வரு­கின்றோம்.நிரந்­தரத் தீர்­வின்றி சமா­தான வாழ்வை எட்ட முடி­யாது. தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை தீர்க்­கக்­கூ­டி­ய­தான அர­சியல் தீர்­வுதான் நமக்கு வேண்டும்.போர் முடிந்தும் தமி­ழர்­க­ளுக்கு நிம்­ம­தி­யான வாழ்வு கிட்­ட­வில்லை.இங்கு வாழும் மக்­களின் வாழ்க்கையே அதற்கு சாட்சியாகவுள்ளது.மாகாண சபை முறை ஒரு தீர்வு இல்லை.இதன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை ஏற்கவில்லை எனவும் கூறினார்.


Post a Comment

0 Comments