சிறைக்குச் சென்றாலும் தூக்குத் தண்டனை பெற்றாலும் மிலேச்ச போக்குடைய ஊழல் நிறைந்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நான் மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவ்வாறே மன்னிப்புக் கேட்க மாட்டார் என அவர் குறிப்பிட்டார்.
மாத்தறை பிரதேசத்தில் ரணில் ஆதரவு மற்றும் எதிராளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பாதிக்கப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர் கிரிஷாந்த புஸ்பகுமாரவை நலன் விசாரிக்க நேற்று சென்றவேளை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பத்திரிகைகளில் வெளியாகியுள்ள தகவல் உண்மை எனில், யாரேனும், முன்வந்து எனக்கு பிணை வழங்கியிருப்பார்களாயின் இதிலிருந்து மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு ஏற்றாற்போல் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் தீர்ப்புக்களை மாற்ற முடியும் என்பது புலனாகிறது.
தற்போது இலங்கை பொலிஸ் சேவை ராஜபக்ஷ குடும்ப தேவைகளுக்கான சேவையாக நியமிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 45 பேர் வரையில் கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐவருக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட ஹர்மன் குணதிலக்க எனும் தீவிரவாதியை பொலிஸார் உபசரித்தமை குறித்த காணொளி ஆதாரம் எம்மிடம் உள்ளது.
மாத்தறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உ ரிமைகள் ஆணைக்குழுவிடம் அல்லது சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தனியார் ஊடகம் ஒன்றிற்கு எதிராக நீதிமன்றிற்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


0 Comments