Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இருந்து கிளைமோர் மீட்பு : விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதா..? பரபரப்பு தகவல்.

மட்டக்களப்பு - கிரான் பிரதேச தனியார் காணியொன்றில் இருந்து கிளைமோர் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

இந்த காணி கிரான் வைரவன் கோயில் வீதியைச் சேர்ந்த தங்கவேல் யோகம்மா என்பவருடையது எனத் தெரியவந்துள்ளது. 

வீட்டிலுள்ளோர் வளவினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, மர்மப் பொருளொன்று தென்படுவதை கண்டு, பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து குறித்த வெடிபொருளை இன்று காலை ஏறாவூர் பொலிசார் மீட்டுள்ளனர். 

இந்த வெடிபொருள் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments