Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

“ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக்கப்படும் என்று நம்புகிறேன்” – வோல்கர் டர்க்

 


பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார். 


இலங்கைக்கான தனது விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இன்று (26) பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை வெளியிட்டார்.

இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்துடன் விவாதித்ததாகவும் அவர் கூறினார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்குமாறு கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கருத்து தெரிவித்த மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர்,

“ஒரே பாலின திருமணத்தைக் குற்றமற்றதாக்க முன்மொழியும் தற்போதைய சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். 

மேலும், நிகழ்நிலை பாதுகாப்பு குறித்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். 

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மீண்டும் தொடங்குவது நேர்மறையான நடவடிக்கையாகும். 

ஆதேபோல், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை.” என்றார்

Post a Comment

0 Comments