ஏர் இந்தியா விமானம் ஏஐ171 விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக ரமேஷ் விஸ்வக்குமார் புச்சர்வாடா உயிர் தப்பினார். அதேபோல் இன்னொரு பெண் லண்டனுக்குச் செல்லவிருந்த நிலையில் அந்த விமானத்தை மிஸ் செய்த காரணத்தால் உயிர் பிழைத்துள்ளார்.
ஏர் இந்தியா விமானம் AI171-ல் ஏற வேண்டியிருந்த பூமி சௌஹான் என்ற பெண்.. பத்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் உயிர் தப்பினார்.
விபத்தில் இருந்து தப்பிய பூமி சௌஹான், தான் கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும், கணபதி பாப்பாவே தன்னைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்தார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதாகவும். அங்கே கணபதி ஊர்வலம் ஒன்று நடந்தது. அதனால் விமான நிலையத்திற்கு நேரத்திற்கு செல்ல முடியவில்லை. அதன் காரணமாக விமானத்தை தவறவிட்டதாகவும் கூறினார்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்திருந்த லண்டனைச் சேர்ந்த பூமி சௌஹான், தனியாக இங்கிலாந்துக்குத் திரும்ப திட்டமிட்டிருந்தார். விபத்து நடந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோன அவர், உடல் நடுங்குவதாகவும், என்ன பேசுவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். மேலும், நடந்த சம்பவங்களை கேட்ட பிறகு தன்னுடைய மனம் வெறுமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
🌐 *💯நம்பகமான செய்திகளை நாள்தோறும் பெற்றுக்கொள்ள நமது வாட்ஸ்அப் குழுவில்* *இணைந்திடுங்கள்📱**
*https://chat.whatsapp.com/FwzoXFD795mLL3aMeFM7GA*
*👉ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்💯*
📱 *நீங்களும் இக்குழுவில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளலாம்*
*🌐 *குறைந்த கட்டணத்தில் உங்கள் பெறுமதியான விளம்பரங்களை எமது whatsapp குழுமங்களில் பகிர்ந்து கொள்ள கீழுள்ள லிங்கை கிளிக்* *செய்து எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்*
*https://wa.me/+94773418460*
📲
*எமது Facebook பக்கத்தை Like செய்வதனூடாகவும் FB பக்கத்தை following* *செய்வதனூடாகவும் செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். Link* 👇
*https://www.facebook.com/profile.php?id=100063202301521&mibextid=hIlR13
🙏
*_உங்கள் ஆதரவினை Share பண்ணி எங்களுக்குத்தாருங்கள்_*
0 Comments