Home » » நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை வேலை நிறுத்தம்

 


நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில் நாளை (02) அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கை தேசிய வைத்தியசாலை,
கராபிட்டிய போதனா வைத்தியசாலை,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,
பேராதனை போதனா வைத்தியசாலை,
திருகோணமலை போதனா வைத்தியசாலை,
கேகாலை பொது வைத்தியசாலை,
பொலன்னறுவை பொது வைத்தியசாலை,
மன்னார் ஆதார வைத்தியசாலை,
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் நாளை அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |