Home » » மட்டு குருக்கள்மடத்தில் 16.01.2023 இடம் பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு பலத்த காயம்.

மட்டு குருக்கள்மடத்தில் 16.01.2023 இடம் பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு பலத்த காயம்.

 மட்டு குருக்கள்மடத்தில் 16.01.2023 இடம் பெற்ற விபத்தில்    சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு பலத்த காயம்.










களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சற்றுமுன் முச்சக்கரவண்டி ஒன்றும் DSI ரயர் நிறுவனத்தின் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


மட்டு கல்முனை பிரதான வீதி வழியே களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த DSI ரயர் கம்பனிக்கு சொந்தமான லொறியும் குருக்கள்மடம் செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வளைவில் நேருக்கு நேர் மோதியுள்ளது இவ்  விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.  உயிரிழந்த இளைஞன் மண்டூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் காயமடைந்தவர்கள் மண்டூர் மற்றும் எருவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது 


இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |