Home » » பாடசாலை விடுமுறைகள் குறித்து விசேட அறிவிப்பு! ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாகவும் கருத்து

பாடசாலை விடுமுறைகள் குறித்து விசேட அறிவிப்பு! ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாகவும் கருத்து

 


அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் பாடத்திட்டத்தை கற்பித்து முடிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

இம்மாதம் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதன் பின்னர் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் புதிய ஆண்டுக்கான பாடசாலை தவணை பெப்ரவரி 19ஆம் திகதி முதல் தொடரும் என கொழும்பில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் இதுவரை கலந்துரையாடப்பட்டதாகவும், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 10,000 ரூபா உதவித்தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |