Home » » அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை

 


அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்கும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வெளிநாட்டு கடனை மேம்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் தேவையான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |