Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இராஜாங்க அமைச்சர் டயானா வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு

 


இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா தன்னை தாக்கியதாக அதே கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான டயானா கமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்தின் பின்னர் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கவுள்ளதாக இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments