Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மது போதையில் பேராதனை மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் கைது!


பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரும் பிக்கு மாணவர்கள் எனக் கூறப்படும் ஆறு மாணவர்கள் மது போதையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி நகர தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பிக்கு மாணவர்கள்


மது போதையில் பேராதனை மற்றும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக பிக்கு மாணவர்கள் கைது! | 6 Students Aressed For Drunkenness Case In Kandy

கைது செய்யப்பட்ட பிக்கு மாணவர்களில், 5 பேர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், ஒருவர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலும் கல்வியைத் தொடர்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் வைத்து இவர்கள் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments