Advertisement

Responsive Advertisement

ஒழுக்கமற்ற வகையில் செயற்பட்டால் பரீட்சை எழுத முடியாது கல்விக் கொடுப்பனவுகளும் இரத்து : மாணவர்களுக்கு எச்சரிக்கை !

 


ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைக் காப்பாற்ற முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஒழுக்கமற்ற முறையில் செயற்படும் மாணவர்களின் பரீட்சையை இரத்து செய்வது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ருஹுனு பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களின் கல்விக் கொடுப்பனவுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான கடுமையான தீர்மானங்களை எடுப்பது எவசியம என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments