Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சர்வதேச நாணய நிதியத்தின் இசைக்கு நடனமாடும் அரசாங்கம் – தேசிய மக்கள் சக்தி

 


சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் வரிகளை அதிகரித்து பொதுமக்களுக்கு சுமைகளை சுமத்துவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.


இன்று காலை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அக்கட்சி உறுப்பினர் விஜித ஹேரத், புதிய வரிகளை அறிமுகம் செய்தல், VAT வீதம் உட்பட ஏற்கனவே உள்ள வரிகளை அதிகரிப்பது எனது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் என கூறினார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய அரசாங்கம் சமையல் எரிவாயு மற்றும் எரிபொருளின் விலைகளையும் அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்கம் வெளிநாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக கவனம் செலுத்தி உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments