Advertisement

Responsive Advertisement

இலங்கையில் எதிர்கால தலைமுறையை அழிக்கும் இனிப்பு; ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான எச்சரிக்கை



28-08-2022.*

தற்போது பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கவர்ச்சியான நிறங்களுடன் இனிப்பு பண்டமாக விற்பனை செய்யப்படும் போதைப் பொருட்கள் தொடர்பாக மாணவ சமூகம் மற்றும் பெற்றோர்களும் விழிப்பாக இருப்போம்.

நாட்டின் எமது எதிர்கால தலைமுறையை அழிக்கும் ஒரு வேலைத்திட்டமாக இனிப்பு வகைகளுக்குள் போதைப்பொருட்களை இணைத்து சிறுவர்கள் முதல் இளையோர்களையும் போதைக்கு அடிமையாக்கும் ஒரு சதிவலை அம்பலமாகி உள்ளது.

இது தொடர்பான படங்களும், விழிப்புணர்வு பதிவுகளையும் சமூக வலைதளங்களில் வெகுவாக காண கூடியதாக உள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் அதிக பாடசாலைகளில் மாணவர்கள் இந்த இனிப்பு போதைப் பொருள் பாவனையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இது மாதிரியான சமூக விரோத செயல்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பதுடன் இந்த சமூக விரோதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments