Advertisement

Responsive Advertisement

இரண்டு வாரங்களுக்கு இலங்கை முழுமையாக முடங்கும் அபாயம்

 


அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு பூட்டப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத அளவிற்கு எரிபொருள் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், எரிபொருளை இறக்குமதி செய்யும் வரை இந்த அபாய நிலை தொடரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டு வாரங்களுக்கு முடக்க நிலை

இரண்டு வாரங்களுக்கு இலங்கை முழுமையாக முடங்கும் அபாயம் | Lanka Is At Risk Of Complete Lock Down

பொதுப் போக்குவரத்துச் சேவைப் பேருந்துகள் மட்டுமன்றி, சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத அளவுக்கு எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுபாடு

இரண்டு வாரங்களுக்கு இலங்கை முழுமையாக முடங்கும் அபாயம் | Lanka Is At Risk Of Complete Lock Down

அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், கடந்த வாரமும் பல அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டன.

இந்நிலையில், அடுத்த வாரத்தில் நாட்டின் வழமையான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அடுத்த வாரம் டீசல் கப்பல் ஒன்றும், எதிர்வரும் 22ம் திகதி பெற்றோல் கப்பல் ஒன்றும் இலங்கைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments