Home » » சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 


30-07-2022

வெள்ளிக்கிழமை நேற்று (29) 131 கொரோனா தொற்றாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நாட்டில் தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளாந்த கொரோனா தொற்றாளர்களுடன் ஒப்பிடும் போது தற்போது கொரோனா தொற்றாளர்களின் வேகம் அதிகரித்து வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார் 

மேலும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அனைவரும் இணைந்து செயற்படவில்லையாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார் .

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |