Home » » விபத்தில் முதியவர் பலி - களுவாஞ்சிகுடியில் சம்பவம்

விபத்தில் முதியவர் பலி - களுவாஞ்சிகுடியில் சம்பவம்


 (மண்டூர் ஷமி)


களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் கடந்த (18) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் பலியானதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சக்தி இல்ல வீதி களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை செல்லத்துரை என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து தேவாலயத்திற்கு வழிபாட்டுக்காக சென்று கொண்டிருக்கும் போது குறித்த வீதியூடாக கல்முனை இருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த பஸ் மோதியதில் குறித்த நபர் சம்ப இடத்தில் உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் அவர்கள் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |