Home » » மிக் கொள்வனவே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான காரணம்...! - தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி சாட்சியம்!

மிக் கொள்வனவே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான காரணம்...! - தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி சாட்சியம்!

 


லசந்த விக்கிரமதுங்கவின் கொலை வழக்கு தொடர்பில் தாம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், தெ சண்டே லீடர் செய்தித்தாளில் வெளியான மிக் உடன்படிக்கை தொடா்பான தகவல்களே, அவரது கொலைக்கான முக்கிய நோக்கத்தை உருவாக்கியிருக்கலாம் என்று தாம் நம்புவதாக, இலங்கையின் முன்னாள் பொலிஸ் அதிகாரி நிசாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

இவர், 2019இல் கோட்டாபயவின் ஆட்சி வந்தவுடன் சுவிட்ஸர்லாந்துக்கு தப்பிச் சென்றவராவார்.

இந்தநிலையில் நெதர்லாந்து ஹேக்கில் கடந்த 12ஆம் திகதியன்று சர்வதேச பத்திரிகை சுதந்திர அமைப்புகளின் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் நடைபெற்ற லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தில் அவர் சாட்சியம் அளித்தார்.

மிக் கொள்வனவே, லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான காரணம்...! - தப்பிச் சென்ற முன்னாள் பொலிஸ் அதிகாரி சாட்சியம்!

இதன்போது லசந்தவின் கொலையாளிகள் பயன்படுத்திய கைத்தொலைபேசிகளின் கோபுரப் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டதாக நிசாந்த சில்வா குறிப்பிட்டார். விக்கிரமதுங்கவுடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் மற்றும் சாட்சிகளின் சாட்சியங்களும் இந்த விசாரணையின்போது பதிவு செய்யப்பட்டன.

அவர்கள் இலங்கையில் ஊடகவியலாளர்கள் தமது பணிகளை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் பல தடைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |