Advertisement

Responsive Advertisement

கோட்டாபயவின் முடிவு- கனடா எழுப்பிய கேள்வி

 


அவசரகாலச் சட்டத்தை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தும்அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானது” என கனேடிய உயர்ஸ்தானிகர் ட்வீட் செய்துள்ளார்.     

Post a Comment

0 Comments