Advertisement

Responsive Advertisement

கொழும்பில் தீவிரமடைந்த போராட்டக் களம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல்

 


புதிய இணைப்பு

கொழும்பு - யோர்க் வீதியில் மருத்துவ மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து தற்புாது கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

இதற்கு சற்று முன்னர் தீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  


முதலாம் இணைப்பு

அரசாங்கத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள்  முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி தீவிரமடைந்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.   

அத்துடன்,  கொழும்பு காலி முகத்திடல் கோட்டா கோ கம பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 50 நாட்களையும் தாண்டி நடத்தப்பட்டு வருகின்றது. 

தீவிரமடைந்த போராட்டம்


இவ்வாறான நிலையில் இன்றும் அரசாங்கத்திற்கு  எதிராக மருத்துவ மாணவர்கள் மேற்கொண்ட போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து களத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த நீர்த்தாரகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments